மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, September 10, 2014

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி




திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்


மூலவர் : ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி

அமைவிடம்:தூத்துக்குடியில் இருந்து 40 கி.மீ தெற்கில்கடற்கரையில் அமைந்துள்ளது.திருநெல்வேலியிருந்து 55கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

திருச்செந்தூர் விளக்கம் : திருச்செந்தூரின் நடுவில்அமைந்துள்ள சிவக்கொழுந்தீஷ்வரர் திருக்கோவில் கல்வெட்டில் "திருச்செந்திலூர்" என பழங்காலத்தில் அழைக்கப்பட்டது வரலாறு. காலப்போக்கில் மருவி திருச்செந்தூர் ஆக அழைக்கப்பட்டு வருகிறது.அருணகிரி நாதரின் பாடல்களிலும் திருச்செந்திலூர் எனும் வார்த்தைகளை காணலாம்.ஆறுபடை வீடுகளில்ஒன்றாக திருச்செந்தூர் விளங்குவது சிறப்பாகும்

காலம் :

திருச்செந்தூர் கால வரலாறு அறிய இயலாவிட்டாலும் கி.பி 875ல் இரண்டாம் வரகுணபாண்டியன் திருக்கோவில் வழிபாட்டு பூஜைக்காக உதவி செய்ததாக வரலாறு.

திருக்கோவில் மூலவர் மற்றும் உள் அமைப்பு :

சிவபூஜை செய்யும் தவக்கோலத்தில் சடைமுடியுடன் கடற்கரையாண்டியாக ஸ்ரீசுப்பிரமணியர் காட்சி தருகிறார் . நான்கு கரங்களுடன் தவக்கோலத்தில் கிழக்குநோக்கிய நிலையில் நின்று நான்கடிச்சிலையாக நின்று அருள்புகிறார் .

பஞ்சலிங்கம் :

மூலவரை இடப்புறமாக சுற்றி செல்லும் வழியில் வலப்புறமூலையில் ஓர் குகையில் ஒரேபீடத்தில் 5 லிங்கங்கள் அமைந்துள்ளது. இச்சன்னதியில் சிவபெருமானுக்கு முருகப்பெருமான் பூஜை செய்வதாக ஐதீகம் . ஆதலால் மானிடப் பூஜை இச்சன்னதிக்கு இல்லை. திருக்கோவில் மூலவரை தரிசனம் செய்த பின் அங்குள்ள திருக்கோவில் அலுவலர்களிடம் கேட்டால் ரூ5 டிக்கட் பெற்று பஞ்சலிங்க தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள் .

திருக்கோவிலில் வணங்க வேண்டிய சன்னதிகள் :

ஸ்ரீ வள்ளி அம்மன சன்னதி
ஸ்ரீ தெய்வானை சன்னதி
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
63மூவர்
ஸ்ரீ ஜெகந்நாதர்
வீரபாகு,
வீரமகேந்திரர் ,
ஸ்ரீ நந்தீசுவரர் ,
ஸ்ரீ பாலசுப்பிரமணியர்
,ஸ்ரீ மயூர நாதர்
ஸ்ரீ சண்டிகேஷ்வரர்
ஸ்ரீ சனிஷ்வரர்
ஸ்ரீ அருணகிரி நாதர் சன்னதி
ஆகிய சன்னதிகள் முக்கியமானதாகும் .

  1. திருக்கோவில் திறந்திருக்கும் நேரமும் பூஜைகளும் :

எல்லா திருக்கோவில்களிலும் ஆறுகாலப்பூஜை நடைபெறுவது இயல்பு. ஆனால் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சாமிக்கு 9காலப்பூஜைகள் நடைபெறுவது சிறப்பு திருக்கோவில் காலை 5.00 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 9 மணிவரை திருக்கோவில் நடை திறந்தேஇருக்கிறது.

காலை 5.10 திருப்பள்ளி எழுச்சி
5.30 விஸ்வரூப தரிசனம்
5.45 கொடிமர நமஷ்ஹாரம்
6.15 உதயமார்த்தாண்ட அபிஷேகம்
7.00 தீபாராதனை
8.00காலசந்திபூஜை
10.00 கலசபூஜை
10.30 உச்சிகால அபிஷேகம்

12.00 உச்சிகால தீபாராதனை
மாலை 5.00 சாயரட்ஷை பூஜை
இரவு 7.15 அர்த்தசாம அபிஷேகம்
8.15 அர்த்தஜாம பூஜை
8.30 ஏகாத்த சேவை
8.45 பள்ளியறை பூஜை
9.00 நடை திருக்காப்பிடல்

விஸேச நாட்கள் :

ஆடி அமாவாசை ,வளர்பிறை சஷ்டி ,
திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் ,
வைகாசி விசாகம் ஆகிய நாட்களாகும்

திருச்செந்தூர் முருகப்பெருமான் நிகழ்த்திய அற்புதங்கள் :

திருநெல்வேலி கலெக்டராக கி.பி 1803 லூசிங்டன் துரை இருந்தார் . அவர் திருசெந்தூர் திருவிழாவின் போது வந்திருந்தார் .ஸ்ரீ முருகப்பெருமான் அர்ச்சகர் விசிறி வீச திருவீதி உலா வருவதைக்கண்டு நக்கலாக " உங்கள் கடவுளின் சிலைக்கு வியக்கிறதோ? அதனால் விசிறி வீசுகிறீர்களா ? எனக்கேட்ட அர்ச்சகரும்" ஆமாம் " எனக்கூற "அப்படி எனில் நான் பார்க்க முடியுமா ".?என துரை கேட்க மாலைகள் அகற்றி காட்டிய போது ஸ்ரீ பாலசுப்பிரமணிய பெருமானின் உடல்கள் வேர்த்துள்ளதை கண்டு தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்டார் முருகப்பெருமான் அருள்சக்தியை கண்டு வியந்தார்.

முருகப்பெருமானை வணங்கி தமது காணிக்கையாக பல வெள்ளிப்பாத்திரங்களை அளித்து விட்டுச்சென்றார் . அப்பாத்திரங்கள் இன்றும் உள்ளது.

டச்சுக்காரர்கள் பயந்து ஓடிய கதை :

டச்சுக்காரர்கள் திருக்கோவில் ஐம்பொன் சிலைகள், மூலவர் ஆகியோரின் சிலைகளை திருடிக்கொண்டு கடல் மார்க்கமாக பயணத்தை தொடர்ந்தனர் பயணம் தொடங்கிய துவங்கிய கொஞ்ச தூரத்திலேயே கடுமையான அலைகளுடன் புயல்காற்று வீச பயந்து நடுங்கினர்.படகில் உள்ள முருகர் சிலைகளை எடுத்து கடலில் போடுங்கள் இல்லையெனில் எல்லோரும் கடல் சாக வேண்டியதுதான் எனக்கூற பயந்து திருச்செந்தூரில்எடுத்து வந்தமுருகப்பெருமானின் சிலைகள் கடலில் தூக்கிபோட்டுவிட்டனர்

சற்றுநேரத்தில் அலைகள் அமைதியாகி விடடச்சுக்காரர்கள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடி விட்டனர்.அதன்பின் பக்தர் கனவில் வந்த முருகர் கடலில் ஓர் இடம் குறிப்பிட்டு அங்குதாம் இருப்பதாகவும் அவ்விடத்தில் எலுமிச்சை மிதப்பதாகவும் மேலே பெருமாள் கழுகு பறந்து அடையாளம் காட்டுமென கூற அதன்படி பக்தாதிகள் கடலில்சென்று முருகப்பெருமான் மீட்டதாக வரலாறு



திருசெந்தூரில் -மூவர் சமாதி தரிசனம்




திருசெந்தூரில் குரு அம்சமாக அருளோடும் கருணை பொழியும் முகத்தோடும் கடலோரத்தில் காட்சி தருகிறார் ..முருக பெருமானை ஆராதனை செய்து ஆலயம் எழுப்பி அறப்பணி ஆற்றிய அடியார்கள் மூவரின் ஜீவசமாதி கோவிலுக்கு அருகே வாகனம் நிறுத்துமிடத்தில் உள்ளது ...மூவர் சமாதி கோவில் என கேட்டால் சொல்வார்கள் ..அருமையாக இருந்தது ..
1.ஸ்ரீ மௌன சாமி 
2.ஸ்ரீ காசி சாமி
3.ஆறுமுக சாமி
மூவர் சமாதிகள் அடுத்தடுத்து வரிசையாக உள்ளது .


சனிக்கிரக தோஷம் நீக்கும் ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள் 






திருச்செந்தூர் கடற்கரையில் சூரசமஹாரம் நடக்கும் இடத்தில் முருகனின் ஜெயந்தி மண்டபத்திற்கு அருகில் சுமார் பத்திற்கும் மேல் சித்தர் சமாதிகள் உள்ளன. அவற்றில் கடைசியாக தென்னை மரங்கள் சூழ்ந்த சோலையின் நடுவில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருந்தவர் தான ஸ்ரீசத்குரு சம்ஹாரமூர்த்தி சுவாமிகள்.


அவரை வணங்கினால் ஏவல், பில்லி சூனியம், எதிர்ப்பு, கோர்ட், கேஸ் வழக்குகள் மற்றும் சனிக் கிரஹத்தின் கொடிய தோஷங்களும் விலகி விடும் 

மாமியார் கொடுமைக்கு ஆளான மருமகள் எத்தனையோ பேர்கள் சுவாமியை வணங்கி நல்ல வாழ்க்கை அமையப்பெற்றார்கள். கோர்ட் கேஸ் விவகாரங்களில் உயிர் ஆபத்துக்களில் இருந்தும் நிவாரணம் பெற்றிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சுவாமியின் அருளையும் கருணையையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களும் தங்களது வாழ்க்கை துன்பங்களில் விடுதலை அடைய வேண்டும்


நாழிக்கிணறு

 





திருச்செந்தூரின் அதிசயமாக திகழ்வது நாழிக்கிணறு ஆகும். நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகாமையில் உள்ளது. ஆனால், இந்த கிணற்றின் தண்ணீர், நல்ல தண்ணீராக உள்ளது. திருச்செந்தூருக்கு வரும் அனைத்து பக்தர்களும் கடலில் நீராடிவிட்டு, பின்பு இந்த கிணற்று நீரில் நீராடிய பிறகே முருகனைத் தரிசிக்கச் செல்கிறார்கள். இந்த செயலுக்குப் பின்னால் உள்ள புராண வரலாறு மிகவும் சுவாரஸ்யமானது.


அசுர இனத்தைச் சார்ந்தவர்களான தாரகாசூரனும், சூரபத்மனும் இறையருள் பெற்று தேவர்களை அடிமைப்படுத்தினர். வடக்கே தாரகாசூரனும், தெற்கே சூரபத்மனும் மக்களைக் கொடுமைப்படுத்தி ஆட்சி செய்தனர். தேவர்கள் வேண்டுகோளுக்கு இணங்க முருகன் தாரகாசூரனை வீழ்த்திவிட்டார். தெற்கே சூரபத்மனை வீழ்த்த திருச்செந்தூருக்கு வருகை புரிந்தார். முருகனின் மயில் வாகனமாக இந்திரன் விளங்கினார்.

சூரபத்மனோடு ஐந்து நாட்கள் கடும் போர் நடந்தது. இந்தப் போரில் சூரபத்மனின் படைகளும், அவனது சகோதரர்களும் அழிக்கப்பட்டனர். போரின் ஆறாம் நாள் அன்று சூரபத்மன் மட்டும் தனியாக போருக்கு வந்தான். தனது சக்திகள் முழுவதையும் பயன்படுத்திப் போர் புரிந்தான். ஆனால், முருகனின் சக்திக்கு முன்னால், அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. இறுதியில் கடலுக்கடியில் உள்ள தனது அரண்மனையில் ஒளிந்து கொண்டான். பின்பு மாமரமாக உருமாறித் தாக்கினான். கார்த்திகேயன் தனது வேலால் மரத்தை இரண்டாகப் பிளந்தார். பத்மாசூரன் உருமாறிய மாமரத்தின் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. இதற்குப் பின்பே முருகன்,சேவல் கொடியுடனும், மயில் வாகனத்தோடும் காட்சி புரிந்தார்.

போர் முடிந்த பின்பு, தனது படை வீரர்களுக்கு தீராத தாகம் ஏற்படவே, முருகன் தனது வேலால் கிணறு ஒன்றினை உருவாக்கினார். அக்கிணறே நாழிக்கிணறு ஆகும். 14அடி சுற்றளவு கொண்ட இந்த சதுரமான கிணறு அதிசயத்தினுள் ஓர் அதிசயம். இந்த கிணற்றின் நீர் உப்பாகவும் கருகிய நிறத்தில் இருக்கும். இந்த கிணற்றின் உள்ளேயே மற்றொரு கிணறு உள்ளது. ஒரு அடி மட்டுமே உள்ள இந்த கிணற்றின் நீர் தெளிவாகவும் மிகவும் சுவையானதாகவும் இருக்கும். ஒரே கிணற்றுப் பகுதியில் இருவேறு சுவை கொண்ட கிணறு அமைந்தது அதிசயத்தினுள் அதிசயம் ஆகும்.

இந்த அதிசயத்தை நேரில் காண திருச்செந்தூர் வாருங்களேன்.

ர .சுரேஷ் 984301651



2 comments: