மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Tuesday, September 9, 2014

ஸ்ரீ சனீஸ்வரன் திருநள்ளாறு

ஸ்ரீ சனீஸ்வரன்


 தாமஸ குணமுள்ளவர். இவருக்கு நீளாதேவி, மந்தாதேவி, சேஷ்டாதேவி என மூன்று மனைவியர். குளிகன் என்றொரு மகன்.

இவர் இரும்பு, எண்ணெய், கருப்பு தானியம், பூமியில் புதைந்த புதையல் முதலியவற்றுக்குக் காரகர். அவரவர் கர்மவினைப்படி வறுமை, கலகம், நோய், அவமதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறவர்.
ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல இடத்தில் தங்கி வலுவும் பெற்றிருப்பாரானால் அளவற்ற நலன்களை வாரி வழங்குவார்.
சனீஸ்வரருக்கு சனிக்கிழமைகளில் அபிஷேகம் செய்வித்து, கருப்பு வஸ்திரம், நீலக்கல், கருங்குவளை போன்றவற்றால் அலங்காரம் செய்து, சனீஸ்வர மந்திரங்களை ஓதி,வன்னிச்சமித்தினால் யாகத்தீயை எழுப்பி எள்ளு தானியம், எள்ளுப்பொடி அன்னம் ஆகுதி செய்து, நல்லெண்ணை தீபமேற்றி, அர்ச்சனை செய்து, தூப,தீப நைவேத்தியம் செய்து ப்ரார்த்தனை செய்தால் சனிகிரக தோஷம் நீங்கும்



முன்பொரு சமயம் நிடத நாட்டை நளன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவன் விதர்ப்ப நாட்டு இளவரசி தமயந்தியை சுயம்வரத்தின் மூலம் விவாகம் செய்தான்.

தமயந்தி தனக்குக் கிட்டாத்தால் கலிபுருஷன் நளன் மீது அழுக்காறு கொண்டார். நளனைப் பழிவாங்க நல்லதொரு சமயம் எதிர்பார்த்திருந்தார். ஒரு நாள் அந்திப் பொழுதில் நளன் இறை வழிபாட்டுக்காகத் தன்பாதங்களை தூய்மை செய்தபோது பின்னங்காலில் தண்ணீர் படவில்லை. சனிபகவானுக்கு நளன் குற்றம் புரிந்தான் என்பதற்கு இதுவே போதிய காரணமாயிற்று. அவனைப் பற்றிக் கொண்டார்.
சனி புத்தியின் காரணமாய் நளன் புட்கரன் என்ற அரசனோடு சூதாடி நாட்டை இழந்தான். நால்வகைப் படைகளையும் இழந்தான். மனைவி மக்களோடு நாட்டை விட்டுச் சென்றான். பிள்ளைகளாவது
வருத்தமின்றி வாழட்டும் என்று தன் மாமன் வீட்டிற்கு அனுப்பி வைத்தான். மனையாளோடு கானகம் சென்றான். காதலியைக் கானகத்தில் காரிருள் தனிமையில் கைவிட்டுப் போகுமாறு சனீஸ்வரன் நளன் மனதை வேறுபடுத்தினான்.

பொழுது புலர்ந்த்தும் கணவனைக் காணாமல் கதிகலங்கினால் தமயந்தி. சுவாதகுகன் என்ற மன்னன் அவளை அவளது தாய் வீட்டில் கொண்டு சேர்த்தான்.

கானகத்திலோ நளனைக் கார்கோடன் என்னும் சர்ப்பம் தீண்டியது. அவனை அழகற்றவனாக்கியது. கரிய மேனியும் விகாரமான தோற்றமும் கொண்டு நளன் வாகுனன் என்ற பெயருடன் இருதுபன்னன் என்னும் மன்னனிடம் தேர்ப்பாகனானான்.

தமயந்தி நளனோடு மீண்டும் சேர தந்தையிடம் மறு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யக் கோரினாள். சுயம்வரத்திற்கு மன்னன் இருதுபன்னன் நளனைத் தேரோட்டியாக அமர்த்திக் கொண்டு வந்து சேர்ந்தான்.

அரண்மனை சமயற்கூடத்தில் தன் பிள்ளைகளிடம் வாகுனன் காட்டிய பேரன்பைக் கண்ட தமயந்தி அவனே தன் கணவன் என்பதை உணர்ந்தாள்.

அவள் தந்தையும் வாகுனனை அழைத்துக் கேட்க நளன் உண்மை தெரிய வரும் நேரம் நெருங்கியதை உணர்ந்தான்

கார்கோடன் கொடுத்த அது காலம் வரை மறைத்து வைத்திருந்த அரவுரியை அணிய அவனுடைய அவலட்சனம் மறைந்து அழகே உருவான நளனாய் மாறினான். அனைவரும் ஆனந்தம் அடைந்தனர்.

நளன் மனையாள் மக்களோடு இனைந்தான். மாமனின் சேனைகளுடன் புட்கரனைப் போரில் வென்றான். நாடு மீட்டான். அனைத்தையும் மீண்டும் அடைந்த பின்பும் நளன் மனதில் அமைதி இல்லை.

அவன் அவைக்கு வருகை புரிந்த நாரதர். நளனின் மன அமைதி இல்லாமைக்குக் காரணம் சனியே என்றும் சனி விலக திருத்தல பயணம் மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினார்.

நளன் மனைவி மக்களோடு திருத்தலப் பயணம் மேற்கொண்டான். வழியில் விருத்தாசலத்தில் பரத்வாஜ முனிவரைக் கண்டு வணங்கினான். பரத்வாஜர் நளனிடம் திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டால் சனிபகவான் விலகிட, சாந்தி நிலவும் என அருளுரை கூறினார்.

நளன் திருநள்ளாறு அடைந்தான். தீர்த்தம் ஒன்றை உருவாக்கி நீராடினான். ஆலயத்துள் நளன் குடும்பத்துடன் அடியெடுத்துவைத்த கணமே சனிபகவான், நளனை இனியும் பிடித்திருத்தல் தகாது என விலக நினைத்தார். இருந்தபோதும் முழுதாய் விலகவில்லை.

தர்ப்பாரண்யருக்குப் பாயந்து மூன்றாம் கோபுர வடக்குப் பக்க மாடத்தில் மறைந்து கொண்டார்.

சர்வேஸ்வரன் தம்மை வணங்கி நின்ற நளன் குடும்பத்திற்கு பெருங்கருணை புரிந்தார். சனிபகவானிட்மும் தம்மை வழிபடும் அடியவர் அவரையும் வழிபடுவர் என்று அருளினார். ஒளிந்து கொண்டிருந்த மாடத்திலேயே வீற்றிருந்து அவரை வழிபடும் அடியவர்களின் துன்பம் தீர்த்து இன்பம் அருள திருவாய் மலர்ந்தார்.

அப்போது நளன் தன் மனதில் இருந்த மலை போன்ற சுமை விலகியதை உணர்ந்தான். மனைவி மக்களும் பாரம் நீங்கி மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர்.

சனி பகவானால் பீடிக்கப் பெற்றவர்கள் எவராயினும் திருநள்ளாற்று ஈஸ்வரனையும், சனீஸ்வரனையும் தொழுதால், எல்லாத் தொல்லைகளும் தீர்ந்து நலங்கள் பெறுவார்கள்.

திருக்கோயில் திருநள்ளாற்றின் மையத்தில் அமைந்துள்ளது. ஏழு நிலை ராஜகோபுரம். உட்புகுந்தால், அகலமான முற்றவெளி. இடப்புறம் இடையனார் கோயில்.

இரண்டாம் பிரகாரத்தில் அம்பாள் சன்னிதியின் தெற்கு கோபுர வாயில். இங்கே நந்தவனமும், காளத்தி நாதர் கோயிலும் அமைந்துள்ளது. கிழக்கில் இருக்கும் கட்டை கோபுரத்தின் வாயிலில் கற்பக விநாயகர்.

மூன்றாம் பிரகாரத்தில் நகவிடங்கப் பெருமான், நந்தி மற்றும் அறுபத்து மூவர் ஆகியோர் திருவுருவங்கள் பிரதிஷ்டை ஆகியுள்ளன. சிறிய மண்டபம் ஒன்றில் கலி நீங்கிய நளன் திருவுருவமும் சிவலிங்கத் திருமேனியும் உள்ளது.

அறுபத்து மூவருக்கு எதிரில் தெற்கு வாயிலுக்கு அருகில் தக்க்ஷணாமூர்த்தி சந்நிதி. கன்னிமூலையில் தல விநாயகர், சொர்ண விநாயகர் தஞ்சமளிக்கிறார்.

வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி திருச்சன்னதி தனி ஆலையமாகத் திகழ்கிறது.

தங்கமயமான கொடிமரம் கடந்து திரு அணுக்கன் திருவாயிலை அணுகினால் தர்ப்பாரண்யேஸ்வரரைக் கண்ணாரக் கண்டு கசிந்து உருகலாம்.

அன்னைக்குத் தனிச்சந்நிதி. கருவறையில் போகமார்த்த பூண்முலையாள் எழுந்தருளியிருக்கிறாள்.

அன்னையின் சந்நிதிக்கு இடது புறத்தில் இத்தலத்திற்கே சிறப்பான சனிபகவான் கட்டைக் கோபுரச் சுவரில் உள்ள மாடத்தில் எழுந்தருளியுள்ளார்.

சனீஸ்வரர் , சூரியனின் இரண்டாவது மனைவியான சாயாதேவிக்கு இரண்டாவது மகனாகத் தோன்றியவர். இவருக்குச் சனைச்சரன், மந்தன், பங்கு எனப் பல திருநாமங்கள் உள்ளன. கருப்பு நிறத்தவர் ஆதலால் காரி எனவும் அழைக்கப்படுகிறார்.

சனீஸ்வரன் பெரிய தாயாரான சஞ்ஞீகையை அலட்சியப் படுத்தியதால் அவரது இரண்டாவது மகனாகிய எமன் சினம் கொண்டு தனது தண்டத்தால் சனியின் முழங்காலில் அடித்ததால் இவரது வலது முழங்கால் ஊனமானது. இதனால் பங்கு என்று பெயர் வந்தது. பங்கு என்பதற்கு நொண்டி என்று பொருள்.

ஆஞ்சிநேயரைச் சனிக்கிழமைகளில் வழிபட்டு வருவதாலும் நீலக் கல்லை அணிவதாலும் கருப்பு நிற வஸ்திரத்தையும், எள்ளையும் தானம் கொடுப்பதாலும் , சனிக்கிழமைகளில் எள் தீபமிட்டுச் சனிபகவானுக்கு அர்ச்சனை செய்வதாலும் சனிக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகும்.




னி கொடுக்க எவர் தடுப்பார்'
1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.
4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.
6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.
7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை.
8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.
9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.
10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
தீமை தரும் சனி பார்வை
1. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
2. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
3. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.
4. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.
5. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.
6. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.
7. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
8. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.
9. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில்¢ ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.
10. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
11. தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

திருத்தலக் குறிப்பகள்
தலத்தின் பெயர்: திருநள்ளாறு

சுவாமியின் திருநாமம்: ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் , சனீஸ்வரர்.

எங்கே உள்ளது: தமிழ்நாட்டின் அருகில் புதுவை மாநிலத்திற்குட்பட்ட காரைக்காலில்.

எப்படிச் செல்வது: சென்னையிலிருந்தும், கோவையிலிருந்தும் காரைக்காலுக்கு ரயில், பேருந்து மற்றும் கார் மூலம் செல்லலாம். காரைக்காலில் இருந்து பேருந்து, கார் மற்றும் ஆட்டோ மூலம் சென்றடையலாம்.

எங்கே தங்குவது: காரைக்கால் மற்றும் கும்பகோணத்தில் தங்கும் விடுதிகளும் , உணவு விடுதிகளும் உள்ளன.

தரிசன நேரம் :
காலை 06.00 மணி முதல் பகல் 12.30
மாலை 5.00 முதல் இரவு 08.30
சனிக்கிழமை காலை 05.00 மணி முதல் இரவு 9.00 வரை
கோயில் முகவரி
நிர்வாக அதிகாரி
திருநள்ளாறு தேவஸ்தானம்,
திருநள்ளாறு அஞ்சல்,
காரைக்கால் 609606
தொலைபேசி : 0436 - 236530,236504



No comments:

Post a Comment