மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, September 10, 2014

ஸ்ரீ காகபுசுண்டர் மகரிஷி


ஸ்ரீ காகபுசுண்டர் மகரிஷி 

காகபுசுண்டருக்கு எப்படி இந்தக் காரணப்பெயர்ஏற்பட்டது என்பதற்கு போக முனிவர்விளக்கம் கூறுகின்றார்.முன்பு ஒரு காலத்தில் சக்தி கணங்கள்
மது உண்டு நடனமாடிக்களித்திருக்கையில்அப்போது அங்கு சிந்திய
மதுத்துளிகள் குடிநீரில்கலந்துவிட, அந்த நீரினைப் பருகியதேவலோகத்து அன்னங்களும்மனமயக்கத்துடன் மகிழ்ச்சியில்ஆடிக்கொண்டிருந்தன. இந்த
மதுக்களிப்புநடனத்தை சிவனும் பார்வதியும்கண்டு மகிழ்ந்திருக்கும் வேளையில்மகிழ்ச்சியின் எல்லையில்சிவகணமானது காகத்தின் உருவில்
அன்னத்தைச்சேர அன்னம்அப்போதே கர்ப்பமுற்று இருபத்தொரு
முட்டைகள் இட,இருபது அன்னக் குஞ்சுகளையும்ஒரு காகத்தையும் பொரித்தது.இருபது அன்னங்களும் அநேக நாட்கள்வாழ்ந்து முக்தியடைய,
சிவகலையால் பிறந்த காகம் மட்டும் அழியாமல் இருக்கும்பேறு பெற்றது. அந்தக் காகமே இந்த காகபுசுண்டர் என்று சித்தர் பாடல்கள்இவர் வரலாற்றைத் தெரிவிக்கின்றன. 


வர ரிஷியின் சாபத்தால் உலகத்தில் சந்திர குலம் விளங்க ஒரு வெள்ளாட்டின் (விதவை) வயிற்றில் பிறந்தவர் இவர் என்றும், பிரளய காலத்தில் காக்கை வடிவெடுத்து அப்பிரளயத்திலிருந்து தப்பிப் பிழைத்து அநேக கோடி வருடங்கள் ஜீவித்து இருந்தாரென்றும் ஒரு வரலாறு தெரிவிக்கின்றது.
காகபுசுண்டர் அன்னத்தின் முட்டையிலிருந்து பிறந்தவரா?
வெள்ளாட்டின் பிள்ளையாகப் பிறந்தவரா? என்னும் ‘ரிஷிமூலம்’
இன்னும் உறுதிப்படுத்த முடியாத தேவரகசியம்.இவர் தமிழ் நாட்டில் பிறந்தவர். இவர் உருவம் கருமையாக இருக்கலாம்; எதையும் கூர்ந்து பார்த்து உண்மை காணும் தன்மையுள்ளவராய் இருக்கலாம். உண்மைகளைக் காணப்
பலவிடங்களிலும் அலைந்து திரிந்தவராயிருந்த மையால் இவர் கபுசுண்டர்
என்று அழைக்கப்பட்டிருக்கலாம்
என்று சாமி
சிதம்பரனார் கூறுகின்றார்.
இவர் காக்கை வடிவில் இருந்து பலஇடங்களிலும் சுற்றித் திரிந்தமைக்கு
இவர் பாடல்களிலேயே ஆதாரம்உள்ளது.“காகம் என்ற ரூபமாய்
இருந்து கொண்டுகாரணங்கள் அத்தனையுமே கருவாய்ப்பார்த்து
வேகமுடன் வெளியோட்ட நிலையாய்ப்பார்க்கவெகுதூரம் சுற்றிஇன்னும் விபரம்காணேன்”என்ற வரிகளால்இஃது உறுதிப்படுகின்றது.
தன்னுள்ளே இறைவன் கோயில்கொண்டுள்ளதை யறியாமல் வீணே
இந்த மனிதர்களெல்லாம் வெளியில்
பல தெய்வங்கள் உண்டு என்று
அலைந்து திரிகின்றனரே என்பதை,
“தானென்ற பிரமத்தை யடுத்திடாமல்தரணியில் தெய்வமடா அனந்த
மென்றும்”
வரிகளில் சுட்டிக்காட்டி,

“முத்தியடா மந்திரத்தைநினைக்கும்போதுமோசமடா மனந்தானும் இரண்டாய்ப்போகும்சக்தியடா மனந்தானே யோக மாகத்
தனித்திருந்து நித்திரையைத்தள்ளி மைந்தா!
புத்தியடா பிரமத்திற்புகுந்து கொண்டாற் பூலோக மெல்லந்தான்
பணியு முன்னே எத்தியே திரியாமற் பிடரி மார்க்கம்ஏறுகின்ற வாசியுந்தான் கற்பந்தானே”
என்று வாசியோக மார்க்கத்தை இறைவனை அடையும் மார்க்கமாக
அறிமுகப்படுத்துகின்றார்.
மனந்தானே உயிர்தா னாகும்
அண்டத்திற் சேர்ந்திடவே ஆகும் முத்தி
பரியேறிச் சவாரியுமே நடத்த லாகும்
பஞ்சமா பாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனந்தனையும் அணுவ
தாக்கி
விட்டகுறை தொட்டகுறை விதியைப்
பார்த்துக்
குறியான குண்டலியா மண்ட வுச்சி
கூறுகிறேன் முக்கோண
நிலைதாமே”
என்று வாசியோகத்தின் மூலம்
குண்டலி யோகம்
செய்து இறைவனைக்
காணும் மார்க்கத்தைப்
போதிக்கின்றார். மேலும்,
“தாமென்ற உலகத்தில் மனித ரோடே
சஞ்சாரஞ் செய்யாற் றனித்து நில்லே
ஓமென்ற ஊண் மிகுந்து உண்டி டாதே
ஓரமாய் வழக்கதனை உரைத்தி டாதே
ஆமென்ற அட்சரத்தை மறந்தி டாதே
ஆயாச மாகவுந்தான் திரிந்தி டாதே காமப்பேய்
கொண்டவனோ டிணங்கிடாதே
காரணத்தைக்
கண்டு விளையாட்டு வாயே”
“விளையாடிக்
கருநெல்லி பறித்தே உண்ணு
வேகாத தலையாகும் விரும்பிப்பாரு
மலையாமல்
வொண்சாரை பிடித்தே யுண்ணு
மைந்தனே சாகாக்கா லதுவே யாகும்
அலையாமல் சோதியதன்
பாலை யுண்ணே
அக்கினியாம்
கம்பமடா சுழுமுனை யாச்சுக்
கலைநாலு போகிறதை யெட்டிற் சேரு
கபடமற்ற
தேகமடா கண்டு பாரே”
இது மனம் காமவயப்படாமல்
வாசியோகம் மூலம் குண்டலி எழுப்பி
நித்திய தேகம் பெறும்
முறையை உபதேசித்தது ஆகும்.
இவர் கூறும் இந்த அக்கினி கம்பம்
சுழுமுனை நாடியாகும். இதனை,
“நேரப்பா நெடுந்தூரம் போகும்போது
நிச்சயமாய்க் கம்பத்தின் நிலையைக்
கண்டேன்;
வீரப்பா அக்கினி போல்
படர்ந்து நிற்கும்
வெளியொன்றுந் தெரியாம
லிருக்குந்தானே”
என்று சுழுமுனைக்கு விளக்கம்
தருகின்றார்.
இந்த சுழுமுனையின்
முடிவில்
மனோன்மணி வீற்றிருக்கும் நிலையை,
“இருக்குமடா எங்குமொன்றாய்
அக்கினிக் கம்பம்
என்மகனே கம்பத்தின் நடுவே மைந்தா
உருக்கமுடன்
பெண்ணரசி யொன்றி நிற்பாள்”
என்று கூறுகின்றார்.
வாசியோகமே காயசித்தி
உபாயமென்பதை,
“சாற்றுகிறே னென்மகனே வாசி நாதா
சத்தியமா யண்டத்திற் செல்லும்
போது போற்றுகிற அக்கினியும்
பிரவேசித்துப்
புலன்களைந்துஞ் சேர்ந்ததனாற் போத
மாகும்
மாற்றிலையும் அதிகமடா வுன்றன்
தேகம்
மைந்தனே அபுரூப மாகுமப்பா
வாற்றியே நிழற் சாய்கை யற்றுப்
போகும்
வலுத்ததடா காயசித்தி யாச்சப்
பாரே”
இவர் உலகில் நிலவும்
சாதி வேற்றுமையைத் தம்
பாடல்களில்
வெகுவாகக் கண்டித்துள்ளார்.
குருவைத் தேர்ந்தெடுப்பதில் மிக
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
என்று கூறும் இவர்
போலி குருவானவர்
உண்மையான
பிரமத்தை அறியாதவர்கள் என்றும்,
அவர்கள் வெறும் வேத
ரகசியங்களை அறிந்ததினால் மட்டும்
மெய்ஞானியராக மாட்டார்கள்
என்றும்,
வெறும் காவியுடையும் யோக
தண்டம் என்னும் முககோல் காலில்
பாத குறடு
இவைகள் மட்டும் ஒருவரைக்
குருவாக உருவகப்படுத்த இயலாது.
இவர்கள்
எல்லாம் ஆணவம் கொண்ட பிறர்
அஞ்சத்தக்க வேடதாரிகள்
என்று கூறி,
இத்தகைய குருமார்கள் பணம்
பறிப்பதிலேயே குறியாக இருப்பார்கள்
என்பார் காகபுசுண்டர்.
“குறியென்ற உலகத்தில் குருக்கள்
தானும்
கொடிய மறை வேதம் எலாம்
கூர்ந்துபார்த்து
அறியாமல் பிரமத்தைப் பாராமல்தான்
அகந்தையாய்ப்
பெரியோரை அழும்புபேசி
விரிவான வேடம் இட்டுக்
காவிபூண்டு
வெறும் பிலுக்காய் அலைந்திடுவான்
நாயைப் போலே;
பரியாச மாகவும் தான் தண்டும்
ஏந்திப்
பார்தனிலே குறடு இட்டு நடப்பான்
பாரே”
“பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி
பணம்பறிக்க உபதேசம் பகர்வோம்
என்பார்”
அகங்காரம் காரணமாக
இதை மறந்து இதைக்
கண்டறிவதற்கான
சாதனத்தையும் நீ
மறந்து விடுவாயானால்
உனக்கு அபரோட்ச ஞானம்
கிட்டாது. பரமாத்மாவுடன்
ஒன்று மட்டும் முக்தி நிலையும்
உனக்குக்
கிட்டாது என்கிறார் காகபுசுண்டர்.
“வேணும் என்றால் எள்ளுக்குள்
எண்ணெய் போலும்
வித்தனிடம் அடங்கி நின்ற விருட்சம்
போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம்
போலும்
கன்று ஆவின் பாலிலே நெய்யைப்
போலும்
தோணுமயில் முட்டையின் மேல்
வர்ணம் போலும்
தூலம் அதி சூட்சுமம்தான்
துலங்கி நிற்கும்
ஆணவத்தால்
சாதனத்தை மறந்தாயானால்
அபரோட்ச ஞானம்,
முத்தி அரிது தானே”
காகபுசுண்டரின் ஞானப்பாடல்
அனைத்துமே அந்தாதித் தொடையில்
அழகுறக் காணப்படுகின்றது.
காகபுசுண்டர் உபநிடதம் என்ற
தலைப்பிலான
மூன்று பாடல் தொகுப்பும் குறள்
வெண்பா தொகுப்பு ஒன்றும் சித்தர்
பாடல்
தொகுப்பில் காகபுசுண்டர்
பாடியனவாகக் காணப்படுகின்றன.
யோகம் அறுபத்து நான்கு என்பதை,
“அறுபத்து நால்யோக மவ்வளவுந்
தள்ளி
ஒருபொழுது முண்டுநிலை யோர்”
என்ற குறளிலும் சித்தர் பதினெண்மர்
என்பதை,
“சித்தர் பதினெண்மர் செய்கையிற்
றோன்றாத
அத்தனரு ளும்புசுண்டன் யான்”
என்ற குறளிலும் புலப்படும் இவர்
இப்பதினாறு பாடல் தொகுதியை,
“யோகமுடன் கற்ப முரைத்தேனீ
ரெட்டினில்
வேகமுடன் கண்டுஉணரு வீர்”
என்று கூறி முடிக்கின்றார்.

No comments:

Post a Comment