மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, September 19, 2014

ராகு பகவான் தோஷம் நிவர்த்திக்கான தலம்

திருநாகேஸ்வரம் 

 


  நவக்கிரகங்களில் ராகு பகவானுக்கான தலம்  

 மூலவர் - நாகேஸ்வரர்
அம்பாள் - கிரிகுஜாம்பிகை மற்றும் பிறையணி நுதலாள்
தலமரம் - செண்பக மரம்
தீர்த்தம் - சூரிய தீர்த்தம் முதலான 12 தீர்த்தங்கள்




  சேக்கிழார் திருப்பணி செய்த தலம் , இத்தலத்தை மிகவும் நேசித்தமையால் தனது ஊரான குன்றத்தூரில் இப்பெயரிலேயே ஒரு கோயில் கட்டியுள்ளதாக வரலாறு

  ஆதிசேஷன் , தட்சன் , கார்க்கோடகன் முதலிய நாகராஜாக்களும் , நந்தி , கெளதமர் , நளன் , பராசரர் , பகீரதன் , விநாயகர் , பாண்டவர்கள் , வசிஷ்டர் , பிரம்மன் , இந்திரன் , சனக முனிவர் , சித்திரசேனன் , நற்குண முனிவர் முதலியோரும் வழிபட்டு அருள் பெற்ற தலம்

  அர்த்தநாரீஸ்வரர் வடிவம் வேண்டி அம்மை சிவனாரை வழிபட்ட தலம்

  ராகுபகவான் தனிச்சந்நிதியில் தன் இரு மனைவியருடன் எழுந்தருளி சிறப்புடன் அருள்பாலிக்கிறார் . இவருக்கு அபிஷேகம் செய்யப்படும் பால் நீலநிறமாக மாறுவதாக சொல்லப்படுகிறது

  கிரிகுஜாம்பிகை அம்மன் தனிக்கோயிலில் தனிச்சிறப்புடன் திகழ்கிறார் . கிரிகுஜாம்பிகை அம்மையின் திருவடிவம் சுதை வடிவத்தில் இருபுறமும் சரஸ்வதி , லட்சுமி தேவியருடன் தெற்கு நோக்கி திருக்காட்சி , அம்மைக்கு தை மாதத்தில் மட்டும் புனுகு சட்டம் சாற்றப்படுகிறது

  சிவனார் கிழக்கு நோக்கியும் , பிறையணி நுதலாள் அம்மை சிவனாருக்கு அருகிலேயே தனிச்சந்நிதியில் கிழக்கு நோக்கியும் திருக்காட்சி

  தல விநாயகராக செண்பக விநாயகர் , சூரிய தீர்த்தக் கரையில் மழுப்பொறுத்த விநாயகர்

  சேக்கிழார் மண்டபத்தில் சேக்கிழார் , அவரது தாயார் , தம்பி உருவங்கள்
  2- ம் பிரகாரத்தில் நாகராஜன் உருவம்

  கார்த்திகையில் பெருவிழா , வைகாசி பூசத்தில் சேக்கிழார் குரு பூஜை

  கண்டராதித்த சோழன் காலத்திய பெரிய கோயில்
  காலையில் குடந்தைக் கீழ்க்கோட்டம் , நண்பகலில் திருநாகேஸ்வரம் , மாலையில் திருப்பாம்புரம் என ஒரே நாளில் வழிபடுவது சிறப்பானதாக சொல்லப்படுகிறது


தரிசன நேரம்
காலை 06:00 - 12:45 &
மாலை 04:00 - 08:45
ராகுகால நேரத்தில் ராகுபகவான் சந்நிதி மட்டும் திறந்திருக்கும் . பால் அபிஷேகமும் செய்யப்படுகிறது

கும்பகோணத்தில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது நவக்கிரக ராகுபகவானுக்கான இச்சிவத்தலம்
  மிக அருகில் உள்ளது  ஒப்பிலியப்பன் கோயில் திவ்யதேசம்

No comments:

Post a Comment