மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Tuesday, July 29, 2014

சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவில்அன்னதானம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி
சென்னிமலை ஸ்ரீ சிரகிரி வேலவன் திருக்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர்க்கு ஜூலை மாதம் (31.07.2014) உத்திரம் நட்சத்திரம் வியாழன்கிழமை தினத்தன்று காலை 8.00 மணி அளவில் அபிஷகம், ஆராதனை அன்னதானம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ சிரகிரி வேலவன் திருவருளும் ஸ்ரீ பிண்ணாக்கு சித்தர் திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை
ஸ்ரீ மஹா பஞ்சமுக பிரத்யங்கிரா வேத தர்ம சேக்ஷத்ரா டிரஸ்ட் சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள்.
மேலும் தகவல்கள்களுக்கு
திரு .அண்ணாமலை cell :9442559844

சென்னி மலை முருகன்கோவில்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "
-சுவாமிஜி - மாதாஜி

சென்னி மலை முருகன்கோவில் 

கந்த கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம், மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இது வேறு எந்த தலத்திலும் காணமுடியாது. மாமாங்கத் தீர்த்தம் : 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சியான கோடை காலத்தில் சிறிதேனும்கூட மழையில்லாத கொடூரமான நேரத்தில் மலைக் கோயிலுக்கு தென்புறம் அமைந்துள்ள தீர்த்த விநாயகர் முன்பு திடீரென பொங்கி வழிந்தோடும் மாமாங்கத் தீர்த்தமானது அதிசயம் நிறைந்த தெய்வீகச் சிறப்பாக அமைந்து விடுகிறது. வள்ளி, தெய்வானை சென்னிமலை ஆண்டவரை திருமணம் செய்ய அமிர்த வல்லி, சுந்தர வல்லி என்ற பெயருடன் தவம் செய்து தனிப் பெருங்கோயிலாக பக்தர்களுக்கு காட்சி தருவது சிறப்பு. இவை ஒரே கல்லில் அமைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதருக்கு படிக்காசு வழங்கிய தலம். முருகன் தன்னைத்தானே பூஜித்த தலம். அக்னி ஜாத மூர்த்தி (இரண்டு தலைகள் உள்ள முருகன்) என்ற சுப்ரமணியர் வேறு எங்கும் இல்லை.

Monday, July 28, 2014

ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர்

ஸ்ரீ  காஞ்சி மகா பெரியவர் 


ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா
ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த பக்தகோடிகளில் ஒரு விதவையும் இருந்தார். வெள்ளுடை தரித்து, தன் தலை முடியை முண்டகம் செய்திருந்தார்.
பக்தர்கள் பலருக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, இந்த வயதான மாது மஹானிடம் என்னவோ சொல்ல விரும்புவது போலத் தெரிந்தது. இத்தனைக்கும் அந்த மாது நீண்ட நாட்களாக மடத்திலேயே இருப்பவர்.
அவரது முறை வந்த போது –
“பெரியவாகிட்டே ஒரு விஷயத்தைப் பத்திக் கேட்கணும்” என்றார்.
“உனக்குமா பிரச்சினை…. சொல்லு?”
“இப்பல்லாம் சர்க்கார்லே வயசானவர்களுக்கு பென்ஷனா மாசம் இருபது ரூபாய் தராளாம்”.
“ஆமா, அதுக்கென்ன இப்போ?” மஹான் கேட்கிறார்.
“மடத்து மூலம் சிபாரிசு பண்ணா அந்தப் பணம் எனக்கும் கிடைக்குமோன்னோ”
லேசாகப் புன்னகைத்தார் மஹான்.
“கிடைக்குந்தான். சரி, உனக்கு இங்கே என்ன குறை? வேளா வேளைக்கு சாப்பாடு, புடவையும் தர்றா, தங்க மடத்திலேயே இடம், இதுக்கப்புறம் உனக்கு எதுக்கு பணம்?”
மஹான் இப்படி ஒரு பிரச்னையை எழுப்புவார் என்று அம்மையாருக்குத் தெரியவில்லை.
“சும்மா கிடைக்கிறதே வாங்கிக்கலாமுன்னுதான்” என்று மூதாட்டி மெதுவாகப் பேனினார்.
“இதோ பார், நானும் எந்தவிதமான ஆதரவும் இல்லாதவன் தான். ஏதோ மடத்திலே ஒரு மூலையிலே இருக்கேன். நாம் ரெண்டு பேர் வேணுமுன்னா பென்ஷனுக்கு மனு போடலாமா?” குறும்பாகக் கேட்டுவிட்டு மஹான் சிரித்தார்.
இதைக் கேட்ட அந்த மூதாட்டிக்கு வெட்கம் வந்துவிட்டது. தலையைக் குனிந்து கொண்டார். மஹான் லேசான குரலில் தொடர்ந்தார்:
“நமக்காவது ஒழுங்கா சாப்பிட சாப்பாடு கிடைக்கிறது. வெய்யில் மழையிலே ஒதுங்க ஒரு ஜாகை, உடலை மறைக்கத் துணி – இவ்வளவும் இருக்கு. இதில் எதுவுமே இல்லாத ஏழைகள் எத்தனை பேர் இருக்கா? அவாளுக்குத்தான் சர்க்கார்லே இந்தப் பென்ஷனை தர்றா…அதுக்கான திட்டமும் இருக்கு. நான் உனக்கு இப்போ பென்ஷனை வாங்கித் தந்தா ஒரு ஏழைக்குக் கிடைக்கவேண்டிய உதவி கிடைக்காமே போயிடுமோ இல்லையோ?” என்று கேட்டார்.
இது சிறுதொகைதான். ஸ்ரீமடம் சிபாரிசு செய்தால் அந்த விதவைக்கும் கிடைக்கும். இதனால் சர்க்காருக்கு நஷ்டமில்லை. ஆனால் இதனால் அரசாங்க உதவி தவறான நபருக்கு போனால் அது ஒரு ஏழையை வஞ்சிப்பது போலப் பெரும் பாவமல்லவா?
இதைக் கேட்டபின் தான் மூதாட்டிக்கு மனம் சமாதானமடைந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
“உனக்குமா பிரச்சினை…. சொல்லு?” ஒரு நாள் மாலைப் பொழுது மஹான் ஸ்ரீமடத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த பக்தகோடிகளில் ஒரு விதவையும் இருந்தார். வெள்ளுடை தரித்து, தன் தலை முடியை முண்டகம் செய்திருந்தார். பக்தர்கள் பலருக்கு அருளுரை வழங்கிக் கொண்டிருந்தபோது, இந்த வயதான மாது மஹானிடம் என்னவோ சொல்ல விரும்புவது போலத் தெரிந்தது. இத்தனைக்கும் அந்த மாது நீண்ட நாட்களாக மடத்திலேயே இருப்பவர். அவரது முறை வந்த போது – “பெரியவாகிட்டே ஒரு விஷயத்தைப் பத்திக் கேட்கணும்” என்றார். “உனக்குமா பிரச்சினை…. சொல்லு?” “இப்பல்லாம் சர்க்கார்லே வயசானவர்களுக்கு பென்ஷனா மாசம் இருபது ரூபாய் தராளாம்”. “ஆமா, அதுக்கென்ன இப்போ?” மஹான் கேட்கிறார். “மடத்து மூலம் சிபாரிசு பண்ணா அந்தப் பணம் எனக்கும் கிடைக்குமோன்னோ” லேசாகப் புன்னகைத்தார் மஹான். “கிடைக்குந்தான். சரி, உனக்கு இங்கே என்ன குறை? வேளா வேளைக்கு சாப்பாடு, புடவையும் தர்றா, தங்க மடத்திலேயே இடம், இதுக்கப்புறம் உனக்கு எதுக்கு பணம்?” மஹான் இப்படி ஒரு பிரச்னையை எழுப்புவார் என்று அம்மையாருக்குத் தெரியவில்லை. “சும்மா கிடைக்கிறதே வாங்கிக்கலாமுன்னுதான்” என்று மூதாட்டி மெதுவாகப் பேனினார். “இதோ பார், நானும் எந்தவிதமான ஆதரவும் இல்லாதவன் தான். ஏதோ மடத்திலே ஒரு மூலையிலே இருக்கேன். நாம் ரெண்டு பேர் வேணுமுன்னா பென்ஷனுக்கு மனு போடலாமா?” குறும்பாகக் கேட்டுவிட்டு மஹான் சிரித்தார். இதைக் கேட்ட அந்த மூதாட்டிக்கு வெட்கம் வந்துவிட்டது. தலையைக் குனிந்து கொண்டார். மஹான் லேசான குரலில் தொடர்ந்தார்: “நமக்காவது ஒழுங்கா சாப்பிட சாப்பாடு கிடைக்கிறது. வெய்யில் மழையிலே ஒதுங்க ஒரு ஜாகை, உடலை மறைக்கத் துணி – இவ்வளவும் இருக்கு. இதில் எதுவுமே இல்லாத ஏழைகள் எத்தனை பேர் இருக்கா? அவாளுக்குத்தான் சர்க்கார்லே இந்தப் பென்ஷனை தர்றா…அதுக்கான திட்டமும் இருக்கு. நான் உனக்கு இப்போ பென்ஷனை வாங்கித் தந்தா ஒரு ஏழைக்குக் கிடைக்கவேண்டிய உதவி கிடைக்காமே போயிடுமோ இல்லையோ?” என்று கேட்டார். இது சிறுதொகைதான். ஸ்ரீமடம் சிபாரிசு செய்தால் அந்த விதவைக்கும் கிடைக்கும். இதனால் சர்க்காருக்கு நஷ்டமில்லை. ஆனால் இதனால் அரசாங்க உதவி தவறான நபருக்கு போனால் அது ஒரு ஏழையை வஞ்சிப்பது போலப் பெரும் பாவமல்லவா? இதைக் கேட்டபின் தான் மூதாட்டிக்கு மனம் சமாதானமடைந்தது. நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

சென்னிமலை தலபுராணம் பாடியவர் சரவண மாமுனிவர்.

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "

-சுவாமிஜி - மாதாஜி


 சென்னிமலை தலபுராணம் பாடியவர் சரவண மாமுனிவர்.

சென்னிமலையில் சிறப்புக்களையும், முருகனின் திருவருளையும் தன் செந்தமிழ் கவிகளால் போற்றிப் பாடியிருக்கிறார்.
சரவண மாமுனிவரும் கடைசி வரை சென்னிமலையிலேயே வாழ்ந்து, அங்கேயே ஜீவ சமாதி அடைந்தார். புண்ணாக்கு சித்தர் கோவில் அமைந்துள்ள இடத்திலேயே, சரவண மாமுனிவரின் சமாதியும் அமைந்துள்ளது.
இக்கோவிலின் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண ஸ்வாமிக்கு தனிக் கோவில் உள்ளது. இதற்கு பக்தர்கள் கோழி, ஆடு பலி கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுவர்.
கருப்பண ஸ்வாமி கோவிலுக்கு செல்ல கரடுமுரடான மலைப்பாதைதான் இருந்தது. இதனால் பக்தர்கள் செல்ல மிகவும் சிரமப்பட்டனர். அதன் பிறகே, 10 லட்சம் ரூபாய் செலவில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன.
இங்குள்ள தன்னாசி அப்பனை வணங்குவதால் பில்லி, சூனியம், ஏவல், செய்வினை ஆகிய துன்பங்கள் நீங்கி வாழ்வில் வளமுடன் வாழலாம் என்ற ஐதீகம் பக்தர்களிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

வானில் வந்தவர்             இங்கேயே வாழ்ந்தார்


இவரது இயற்பெயர் தன்னாச்சி அப்பன் சித்தர். "இறைவன் கிருபையும், அருளையும் மறுத்துரைப்பவர்களின் நாவானது புண் பொருந்திய நாக்கு' என்று கூறிய முனிவர் இவர். இதனால் இவரை "புண் நாக்கு' சித்தர் என்று அழைத்தனர். பிற்காலத்தில் "புண்ணாக்குச் சித்தர்' என்று பெயர் மருவியது.
சித்தராக வானவீதி வழியாக பறந்து வந்த இவர், நிலையாக இவ்வாலயத்தில் இருந்து சென்னிமலை சுப்ரமணியரை நினைத்து யோக நிலையில் தவம் புரிந்தார். பின்னர் சென்னிமலையிலேயே புண்ணாக்குச் சித்தர் சிவ சமாதி அடைந்தார்.
அவர் சமாதி அடைந்த பின்னர் அவருடைய சிலையை தற்போதைய இடத்தில் நிறுவி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஆண்டி வடிவில் அமைந்து அருள்பாலிக்கும் முருகனிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் புண்ணாக்குச் சித்தர்.
சென்னிமலையில், 1,740 அடி உயரத்தில் குகை வடிவில் அமைந்துள்ள கோவிலில் இவர் அருள்பாலிக்கிறார். வள்ளி, தெய்வானை சன்னதிக்கு மேல், 800 அடி நீளப்பாதையில் கிழக்கு முகமாக இக்குகை உள்ளது. மக்கள் குறையைப் போக்கும் ஆலயமாக விளங்குகிறது.

சென்னிமலை முருகன் வேங்கமர தேர்-------சென்னிமலை


அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் "

-சுவாமிஜி - மாதாஜி

சென்னிமலை முருகன் வேங்கமர தேர்-------
சென்னிமலை