மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Saturday, September 20, 2014

புரட்டாசியும் சனிவிரதம் சனிபகவானும்


புரட்டாசியும் சனிவிரதம் சனிபகவானும்




பகவான் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் (பாலாஜி) புரட்டாசி மாதத்தில் பூமியில் தோன்றியதாக கூறப்படுகின்றது. புரட்டாசி மாதங்களில் பெருமாளுக்கு மா விளக்கிடுவது மிகவும் உத்தமமானது.இப்படிப்பட்ட மகத்துவமான புரட்டாசி மாதத்தில் சனீஸ்வரனையும் , நாராயணமூர்த்தியையும் வழிபட எல்லா நன்மைகளும் வந்தடையும்.


கிரகங்களில் ஈஸ்வரன் பட்டதை சிவபெருமானிடமிருந்து பெற்றவர் சனீஸ்வர பகவான். முக்காலமும் அறிந்து கொள்ளும் ஞானத்தைத் தரும் வல்லமை படைத்தவர் சனீஸ்வரன் ஆவார்.சனீஸ்வர பகவானை புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் வணங்குவது மிகவும் உகந்தது.
புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகளில் விரதமிருக்க, துன்பங்கள் தீரும், வறுமை நீங்கி தொழில் சிறக்கும்.ஜாதகத்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அட்டமத்துச்சனியாக இருந்தாலும், ஏழரைச்சனியாக இருந்தாலும் சனிபகவானை விரதமிருந்து எள்ளெண்ணையில் தீபமேற்றி எள்தானம் செய்து, கருநீலப்பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் சனிதோஷம் குறையும்.

No comments:

Post a Comment