மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Friday, August 15, 2014

சித்தர் பழமொழிகள்.

சித்தர் பழமொழிகள்.



1. பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்.

2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தன பெருக்கும்.

4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்.


5. புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்.


6. உவப்பன வெறுப்பாம்; வெறுப்பன உவப்பாம் .


பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும்,

உலகம் என்பது நிலையில்லாதது. நாளுக்கு நாள்மாறிக்கொண்டே இருப்பது. அதில் வாழும்உயிர்களும் பரிணாமமாற்றத்திற்குட்பட்டு இறந்தும் பிறந்துமாய் உலகில் சம நிலையை உண்டாக்கிக்கொண்டு வரும்.
எந்த உயிருக்கும் நித்தியத்துவம் என்பது இல்லை.பிறக்கும் எல்லா உயிரும் ஒரு நாள்இறந்தே ஆகவேண்டும். இந்தநியதியிலிருந்து எந்த உயிரும் தப்ப
முடியாது. சரி பிறந்தன இறந்துவிட்டால் அந்தஉயிர் முறுப்புள்ளியாகி விட்டதா என்றால்அதுதான் இல்லை. அப்படிப் பிறந்து இறந்த உயிர்தனது பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மறுபடியும்ஜனன மெடுக்கும். இதுதான் முதற் பழமொழியின்பொருள்.


2. தோன்றின மறையும்; மறைந்தன தோன்றும்.

 
உலகின் எல்லா நிகழ்ச்சிகளும் தோற்றம்
மறைவு உடையவை. காலையில் தோன்றும் ஆதவன்
மாலையில் மறைகிறான். அப்படியானால் மறையும்
சூரியன் மறு நாள் உதயமாகும். இஃது சூரிய
சந்திரர்களுக்கு மட்டுமல்ல , எல்லா உலக
இயக்கங்களுக்கும் பொருந்தும்.


3. பெருத்தன சிறுக்கும்; சிறுத்தனபெருக்கும்.


சந்திரோதயம் பூரண நிலவவாய் காணப்பட்டாலும்
அடுத்த நாள் முதற்கொண்டு தேய்பிறையாய்ச்
சிறுத்துக் கொண்டே வந்து முடிவில்
அமாவாசையாக ஒன்றுமில்லாமல் காட்சிதரும்.
அந்த
அமாவாசை நிலவு பிறகு சிறிது சிறிதாக
வளர்ந்து வளர் பிறை பூரணச் சந்திரனாக
காட்சியளிகும். நிலவு தேய்வதும் வளர்வதும்
இயற்கை நிகழ்வுகள்.
4. உணர்ந்தன மறக்கும்; மறந்தன உணரும்

 
மனிதனுக்கு மட்டும் மறக்கும் ஆற்றல்
இல்லலாதிருப்பின் அவன் இந்நேரம் பைத்தியம்
பிடித்ததல்லவா அலைந்திருப்பான்.
எத்தனை சம்பவங்களைத் தான் அவன்
நினைவு கொண்டிருப்பது. சிறு வயது சம்பவங்கள்
வயது ஆக ஆகச் சிறுகச் சிறுக
மறந்துகொண்டே வர சில முக்கிய சம்பவங்கள்
மட்டுமே கல்லின் மேல் எழுத்தாக
நிலைத்து நிற்கின்றன. உணர்ந்தவை எல்லாம் வயதாக
வயதாக மறந்து கொண்டே வரும். அப்படி மறந்த
சம்பவங்கள் சில எதிர்பாரத நிலையில்
திடீரென்று நினைவுக்கு வருதலும் உண்டு.


5. புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்

 
ஒரு தந்தையும் தாயும்
புணர்ந்து ஒரு குழந்தை உருவாகிறது. அந்த
தந்தை தாயிடம் இருந்து பிரிந்து சென்ற
குழந்தையும் வயதானபின் புணர ஆரம்பிக்கும்.
இது ஒரு வட்டச் சுழற்சி.


6. உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பபாம்


விரும்பிப் போனால் விலகிப் போகும்.
விலகிப் போனால் விரும்பி வரும் என்ற
முது மொழி இப்படி உருமாறி நிற்கின்றது.
பட்டினத்தார் இந்த ஆறு பழமொழிகளையும் கோயில்
திருவகவலில் மனதிற்கு உபதேசமாகச்
சொல்கிறார். மனம் உணருமா?

No comments:

Post a Comment