மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Sunday, August 24, 2014

அர்ப்பணமாக கடமையாற்றுவது தான் அடிப்படை

 அடிப்படையே அர்ப்பணமாக கடமையாற்றுவது தான்

பகவத்கீதையின் அடிப்படையே அர்ப்பணமாக கடமையாற்றுவது தான். எந்தச் செயலைச் செய்தாலும், அதை காமகுரோதம் இல்லாமல் தூய உள்ளத்தோடு கடவுளுக்கு அர்ப்பணமாகச் செய்ய வேண்டும். அதனால் நமக்கு நல்லறிவு உண்டாகும்.
* ஓரிடத்தில் ஒருவருக்கு ஒரு செயல் நியாயமாக தோன்றும். அதே செயல் வேறோரிடத்தில் இன்னொருவருக்கு மற்றொன்று நியாயமானதாக இருக்கும். இருந்தாலும், எல்லோருக்கும் பொதுவான நியாயம் என்று ஒன்று உண்டு. அதைப் பின்பற்றுவது தான் சிறந்ததாகும்.

* நமக்கு எல்லாவற்றிலும் அஞ்ஞானம் இருக்கிறது. நாம் செய்யக் கூடாத செயல்களை தெரிந்து கொண்டிருந்தாலும் பல சமயங்களிலும் செய்யவே முற்படுகிறோம். அஞ்ஞானம் வியாதி போன்றது . இந்த வியாதிக்கு மருந்து ஞானம் தான். அந்த ஞானத்தை ஞானமே வடிவான அம்பிகையே நமக்கு அருள் செய்கிறாள்.


* பணம் நிறைய இருந்தாலும் கவலை; போனாலும் துக்கம் உண்டாகிறது. உலக இன்பங்கள் எல்லாமே அப்படித்தான். அவற்றுக்கு ஆசைப்படாமல் வாழப்பழகிக் கொள்ளவேண்டும். அதனால் மனதில் முழுமையான அமைதியும் ஆனந்தமும் உண்டாகும்.-காஞ்சிப் பெரியவர்



No comments:

Post a Comment