மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Saturday, July 25, 2015

வாழ்வில் இன்பம் அடைய

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும்

வாழ்வில் இன்பம் அடைய 




வேலா சரணஞ் சரணமென் மேல்வெகு ளாமலினி
மேலா யினும் கடைக் கண்பார் பருப்பத வேந்தன்மகள்
பாலா குறுமுனி யார்க்கும் திருப்புகழ்ப் பண்ணவர்க்கும்
ஆலால முண்டவர்க் கும் உபதேசித்தஎன் னாண்டவனே ...

--------------------------முருகர் அந்தாதி ------------------------------

முருகனிடம் உபதேசம் பெற்றவர்கள் மூவர்

தேவ தேவன் --சிவபெருமான் 
முனிசிரேஷ்டர் ---அகத்தியர்
நரசிரேஷ்டர் ------ அருணகிரிநாதர்


நக்கீரர்,கபிலர் ,இடைக்காடர் ,பொய்யாமொழி புலவர்,ஔவையார் ,சிகண்டி ,சிதம்பர ஸ்வாமிகள்,கச்சியப்பர் ,வசிட்டர் இவர்கள் முருகனின் அருள் பெற்றவர்கள் .
இராமயணத்தில் வரும் குகன் ராம பக்தன் ,இறுதியில் திருவடி பேறு அடைந்தது முருகனிடம் தான் .

உயிர் இந்த உடம்பில் இருக்கும் போதே இறைவனை வணங்கி பயனுடைய வேலைகளை செய்து வந்தால் ஆத்மா உடலை விட்டு நீங்கினாலும் கவலை பட வேண்டியதில்லை .தவம் செய்து இறைவழிபாட்டில் இருந்த உயிர் இறைவனை சென்றடையும் .இதுதான் பரமசுகம் .இதை பெற இப்போதே
முருகனை சேவித்து வணங்கி பயன் பெருக.

வேண்டத் தக்கது அறிவோய் நீ ,வேண்டமுழுதும் தருவோய் நீ
என்ற மணிவாசகரின் கூற்றுப்படி
குழந்தைக்கு வேண்டியதை தாய் தருவதை போல் ,நமக்கு வேண்டியதை இறைவன் தருவான் .
நிஷ்காமிய வழிபாடு தான் சிறந்தது .பலனை எதிர் பார்க்காமல் ஆண்டவனை வணங்க வேண்டும் .



No comments:

Post a Comment