மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Wednesday, January 13, 2016

திருக்குறிப்புநாயனார்

திருக்குறிப்புநாயனார்


திருக்குறிப்புநாயனார்.
சித்திரைச் சுவாதி – ஏகாலியர் – தொண்டை நாடு – காஞ்சிபுரம் – கி.பி. 660 – கி.பி. 840
உமை நங்கை உளங்களித்து பூசித்த ஓர் நகரே காஞ்சி அம்மை தழுவக் குழைந்த பெருமானின் அருள் மிகவே முப்பத்திரண்டு வித அறங்கள் ஆற்றிய சிறப்புமிக்க இந்நகரிலே வண்ணார் திருக்குலத்தில் தோன்றியவர் திருக்குறிப்பார்.
அடியவர்கள் அணியும் துணிகளை குறிப்பறிந்து வாங்கி, அதை அழுக்கு நீக்கி வெளுத்துக் கொடுக்கும் அதீதப் பணியில் தன்னை ஈடுபடுத்தி இன்பமுற்று ஈடறு செயல் செய்வார். அடியவர் குறிப்பறிந்து அவர்கட்குப் பணி செய்ததால் இவரது பெயரும் திருக்குறிப்பார் என்று ஆயிற்று.
இவரது சிறப்பினை உலகம் அறிய, இறைவன் முடிவு கொண்டு, காஞ்சியின் தெருக்களில் நடந்து, இவர் முன் நிற்கின்றான். மாசானப் பெருமாளும், மாசான கந்தை சுற்றி மாசிலா அடியர் முன் வருவார். கந்தையின் அழுக்கை நோக்கும் நம் நாயனாரும், வந்தவரை வேண்டி, அவரது துணியை தோய்த்துத் தந்திடுவேன் தருக என வேண்டுவர். வந்த பெருமானோ, ‘ஐய, எனக்கிருப்பதோ இந்த ஒரு கந்தைதான். தருவதற்கு அட்டியில்லை. குளிர் இரவு வருமுன்னே, இதை வெளுத்து உலர்த்தித் தரமுடிந்தால் நன்று. இல்லையேல் வயதான நான், குளிரால் வருந்தும் நிலை வந்துவிடும். முடியும் என்றால் எடுத்துச் செல்லும்’ என்பார்.
திருக்குறிப்பாரும் மிஞ்சிய ஆவலில் முடியும் எனக் கூறிக் கந்தையை வாங்கிச் சென்று, நல்லதோர் திருக்குளத்தில் அழுக்கு நீங்க உவர் மண் தோய்த்துத் துவைத்துக் கசக்குவார். ஓரளவு நீங்கிய அழுக்கில் மனம் ஒப்பாத நாயனாரும், வெள்ளாவில் வைத்து நன்கு சுத்தமாக்க முனைந்து பின் துவைக்க அழுக்கு முற்றும் நீங்கி விடும். இத்துணியை உலர்த்தக் கொடியில் இட, வானம் கருத்து இடி இடித்து நெடிய மழை வரும். ஆடையை அதிகமாக நனைக்கும். மாலை நேர மழையை எண்ணி திருக்குறிப்பார் மிகவும் மனம் உளைவார். சொன்ன உறுதிப்படி துணியை வெளுத்து உலர்த்தித் திருப்பித்தர இயலவில்லையே. அடியவர் குளிரில் வருந்துவாரே! எப்படி அவர் முகத்தில் விழிப்பது? தனது வாழ்வில் இது நாள் வரை இப்படிப்பட்ட இடரைச் சந்தித்ததில்லை. ஏன் இந்தச் சோதனை. எண்ணி உருகுவார். மாற்று நிலை அறியாத குறிப்புத் தொண்டர் மாள்வது ஒன்றே வழி என்று எண்ணி தன் தலையை துணி துவைக்கும் கல்லில் மோதி மடிய முடிவார், இவரது எண்ணம் அறிகின்ற எம்பெருமான் இவ்வடியவர் துயரகற்ற, பாறையிடை தன் கரம் நீட்டி திருக்குறிப்பாரின் பாறை மோதும் தலையினைத் தாங்குவார்.
இறைவனது தீட்சையில் தன்னிலை பெற்ற குறிப்பாரும் வானத்திடை, விடைமேல் தோன்றும் உமை சமேதராய் சிவபெருமான் காட்சி தரக் கண்டு மெய்சிலிர்த்து திருவடியைச் சார்வார். பெய்த மழை நின்று, பெரும்பூ மழை பெய்யும். குறிப்பறிவார் அரன் அடி அமைவார்.
திருச்சிற்றம்பலம்
காஞ்சிபுரத்தில் ஆடிசன் பேட்டைக் கடைவீதியில் திருக்குறிப்பாருக்கு ஓர் கோயில் உண்டு.

No comments:

Post a Comment