மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில் பௌர்ணமி -தங்கக் கவசம்

அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டி மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி கோவிலில்20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (07) மாத ஞாயிற்றுக்கிழமைகாலை 10.00 மணிக்கு மேல் பௌர்ணமி -தங்கக் கவசம் அலங்காரம்காலை 09.00 -11.00 அம்பாளுக்கு ஆவரண பூஜைமற்றும் மாலை 3.00 மணிக்கு ஏக சண்டி ஹோமம் மாலை 6.00 மணிக்கு திருவிளக்குபூஜை நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவி திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :98428 58236

சிங்கம்புணரி முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் பௌர்ணமி அன்னதர்மம் அன்புடன் உலக மக்கள் அனைவரும் ஆனந்தமாய் வாழ வேண்டும் மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சிங்கம்புணரியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் கோவிலில் 20-01-2019 ஸ்ரீ விளம்பி வருட தை (06) மாத ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி அன்று இரவுஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீ முத்துவடுகநாதர் வாத்தியார் சுவாமிகள் திருவருள் மற்றும் ஆசிர்வாதம் செல்லுமாறு மானாமதுரைஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக சுவாமிஜி - மாதாஜி அன்புடன் அழைகின்றார்கள் மேலும் தகவல்கள்களுக்கு: ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிரா தேவியின் ஸாக்த மடாலயம், பஞ்சபூதேஸ்வரம் , வேதியரேந்தல் விளக்கு, மானாமதுரை-630606 சிவகங்கை மாவட்டம் cell :9787521143 ,98428 58236

Sunday, October 5, 2014

திருவருட்பிரகாச வள்ளலார் சாமிகள்

 திருவருட்பிரகாச வள்ளலார் சாமிகள்




திருவருட்பிரகாச வள்ளலார் என்று அறியப்படும் ராமலிங்க அடிகள் தமிழ்நாட்டில் சிதம்பரத்திற்கு 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருதூர் என்னும் கிராமத்தில் 05-10-1823 அன்று அவதரித்தார். அவரது பெற்றோர் ராமய்யா பிள்ளை மற்றும் சின்னம்மை ஆவர். அவரது தந்தை வள்ளலாரின் இளமை பருவத்திலேயே இறந்துவிட்டமையால் அவர்களது குடும்பம் சின்னம்மையின் சொந்த ஊரான பொன்னேரிக்குக் குடியேறியது. இரு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சென்னைக்கு இடம் பெயர்ந்தனர்.
ராமலிங்க அடிகளின் மூத்த சகோதரர் குடும்பத்தை தன் வருமானத்தில் காப்பாற்றி வந்தார். அவர் வள்ளலாருக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தபோதிலும் வள்ளற்பெருமானுக்கு கல்வியில் நாட்டம் ஏற்படவில்லை. அவர் மற்ற சிறுவர்களைப் போல் வேடிக்கை விளையாட்டுகளில் ஈடுபடவும் இல்லை. அவரது எண்ணமெல்லாம் இறை வழிபாட்டிலும், இறையருளை நாடுவதிலும் மட்டுமே இருந்தன. தவிர, வள்ளலாருக்கு இளமையிலேயே தமிழில் அற்புதமான புலமை இருந்தது. சிறுவயதிலேயே பல இறைப்பாடல்கள் புனைந்தார். ஒரு கட்டத்தில் வள்ளலாரின் தமையனாருக்கு வள்ளற்பெருமானின் மகிமை விளங்கியதால் அவரது போக்கிலேயே விட்டுவிட்டார்.



வள்ளலாருக்கு இல்லற வாழ்க்கையில் ஈடுபாடு இல்லையெனினும் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு இணங்கி மணம் புரிந்து கொண்டார். எனினும், சராசரி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடவில்லை. வள்ளற்பெருமானே தனது பாடல்களில் தாம் ஒன்பது வயதில் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டதையும் பன்னிரு அகவையால் தம் ஞான வாழ்க்கை தொடங்கியது பற்றியும் தெரிவித்துள்ளார். ஆரம்ப கால கட்டங்களில் அவர் பல்வேறு ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தபோதிலும் பின்னாளில் சமய மத தெய்வங்களை விடுத்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கினார்.


1858-ல் வள்ளலார் சென்னையிலிருந்து கிளம்பிச் சென்று அவரது சொந்த ஊரான மருதூரின் அருகே உள்ள கருங்குழி என்னும் சிற்றூரில் உறையத் தொடங்கினார். பலரின் நோயைத் தீர்த்தது, நீரால் விளக்கெரித்தது, வெறுங்கையால் மண்ணை தோண்டி நீரூற்றை வரவழைத்தது முதலிய பல்வேறு அதிசயங்கள் அவரால் அங்கு நிகழ்த்தப்பட்டன.
வள்ளற்பெருமான் தமது கொள்கைகளான ஜீவகாருண்ணியம், கொலை புலை தவிர்த்தல், ஒரிறை வழிபாடு முதலியவற்றை பரப்புவதற்காக 1865-ல் சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்தார். அதேபோல், ஏழை எளியோர்களின் பசியாற்றும் பொருட்டு 1867-ல் வடலூரில் தருமச்சாலை தொடங்கினார்.
காலப்போக்கில் வள்ளலார் தனது நெருங்கிய சீடர்களே தமது கொள்கையை அவரது எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு பின்பற்றாததாலும், மக்கள் கூட்டம் வடலூரில் குவியத் தொடங்கியதாலும், தனிமையை நாடி அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தை தேர்ந்தெடுத்து அங்கு உறையத் தொடங்கினார். அங்கு தாம் தங்கியிருந்த இல்லத்திற்கு சித்தி வளாகம் என்று பெயரும் இட்டார். பெயருக்கு ஏற்றாற்போல் அவ்விடம் அவருக்கு சித்தியடைவதற்கான இடமாகவே இருந்தது. வள்ளலார் சாகா வல்லமையும், முத்தேக சித்தியும் பெற்றவர். அவ்வுடலையே ஆண்டவர் உறைவிடமாக மாற்றி இறையோடு ஒன்றறக் கலந்தவர். தம் வாழ்க்கை நிலை, தாம் கண்டறிந்த உண்மைகள், அனுபவங்கள் ஆகியவற்றை அவர் பல்வேறு பாடல்களாக வடித்துள்ளார். அவை திருவருட்பா என்னும் பெயரில் தொகுக்கப்பட்டன. அவர் தம் அக அனுபவத்தின் புற வெளிப்பாடாக சத்திய ஞான சபை கட்டியருளினார்.
வள்ளலார் ஸ்ரீமுக வருடம் தைப்பூசத்தன்று (ஜனவரி 30, 1874) சித்தி வளாகத்தில் உள்ள தமது அறைக்குள் சென்று திருக்காப்பிட்டுக் கொண்டு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரானார்.
வள்ளற்பெருமானார் இன்றளவும் சன்மார்க்கத்தை நடத்துவிப்பவராகவும், சன்மார்க்கிகளுக்கு தோன்றாத்துணையாகவும் இருந்து வழிநடத்தி வருகிறார்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ! !
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ! !



வள்ளலார் பிறந்த பிறகுதான் பயிர்ச் செடிகளுக்கும் ஒரு பாசமுள்ள அன்னை உண்டு என்று உலகுக்குத் தெரிந்தது. அகத்தே கருத்தும், புறத்தே வெளுத்த மனிதர் களை சகத்தே திருத்த தெய்வமாக பிறந்த வர்தான் வள்ளலார்.
‘ஜுவகாருண்ய ஒழு க்கமே கடவுள் வழிபாடு, பசி நெருப்பை அணைப்பதே ஜுவகாருண்யம்’ என்ற புதி ய வேதத்தை தோற்றுவித்தவர். இந்தியாவில் 7 லட்சம் கிராமங்களில் வாழும் உயிர்களை காக்க தமிழகத்தில் அன்னதானம், சம்போஜனம் என்ற விதைகளை முதலில் விதைத்தவர் வள்ளலார்தான். பொருளை அள்ளி அள்ளிக் கொடுத்த வள்ளல்களை விட அருளை அள்ளி அள்ளி வழங்கிய அருட்பிரகாசரை உலகமே வியப்புடன் பார்த்தது, பார்க்கிறது!
ஆன்மிகப் பேரொளி வள்ள லார் ராமலிங்கர் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தே தி மாலை ஐந்தரை மணிக் கு, தென்ஆற்காடு மாவட்டம் மருதூரில் வசித்த இராமை யா-சின்னம்மை தம்பதியரு க்கு தோன்றினார். வள்ளலா ர் என்று அழைக்கப்படும் இராமலிங்க சுவாமிகள் ஞானி மட்டுமல்ல. சமுதாயத்தில் புரட்சிகரமான மாறு தல்கள் செய் யவே அவதரித்தார்.
இராமலிங்கர் குழந்தையாக இருந்த போதே, பெற்றோர் இறந்து விட்டனர். எனவே, இராமலிங்கரை அவருடைய தமையனார் சபா பதி வளர்த்தார். இராமலிங்கருக்கு பள்ளிப் படிப்பில் நாட்டம் இல் லை. சிறு வயதிலேயே இராமலிங்கருக்கு ஆன் மிக நாட்டம் அதிகம் இருந்தது. ஐந்து வயதிலேயே சந்தநயம் மிக்க பக்திப் பாடல்களை இனிய குரலில் பாட தொடங்கினார்.
சென்னை கந்தர் கோட் டத்தில் சரமாரி பொழியும் பாடலைக் கேட்டு, “ படிக்காதவன், முரட்டுப்பிள் ளை” என்று கருதிய சபாபதி இவற்றைக் கண்டு வியந்தார்.
வீட்டு மாடி அறையில் கண்ணாடி முன் விளக்கை ஏற்றிவைத்து அந்த வெளிச்சத்தில் படித்து வந்தார் இராமலிங்கர். அங்குதான், ஒன்பது வயதில் இராமலிங்கருக்கு ‘ஞானோதயம்’ கிடைத்தது.
‘ஒரு நாள், கண்ணாடியில் இருந்து அருட்சோதி கிளம்பி என்னை சூழ்ந் தது. இறையருளின் ஈடு இணையற்ற கருணையில் பரவசப்பட் டேன்’ என்று பக்தர்களிடம் தெரிவித்து ள்ளார், இராமலிங்கர்.
அண்ணன் சபாபதியின் ஆன்மிக சொற் பொழிவுகளின் போது உதவியாளராக செயல்பட்டு வந்தார் இராமலிங்கர். ஒரு நாள் இராமலிங் கரை சொற்பொழிவா ற்றக் கூறினார் சபாபதி.
திருஞான சம் பந்தர் பற்றி இராமலிங்கர் சொற்பொழிவாற்றினார். மெய்மறந்த கூட்டம் ‘12 வய திலேயே அந்த ஞானமா!’ என போற்றி துதித்தது. பல பகுதிகளிலும் இராமலிங்கரின் அருளுரைகள் தொடர்ந்தன.
வள்ளலார் பாதை: மக்கள் மனதில் வள்ளல் வள்ளலார் ஆனார். அவர் அருள்மனம் பல மதத்தினரும் கூடி வழிபடும் ஞானசபை ஆயிற்று.
வள்ள‍லார் தனது திருக்கரங்களால் ஏற்றிய அடுப்பு
வடலூரில் வசிக்க ஆரம்பித்த இராமலிங்கர், 1867 மே 23 ல் ‘தர்மசாலை’யைத் தொ டங்கி ஏழை எளியோர்க்கு உணவு, மருத்துவ சேவை அளித்து அருளுரைகளையும் நிகழ்த்தி வந்தார். அங்குதான், இராமலிங்கரின் தெய்வீக சக்தி சித்து வேலைகளாகப் பொங்கி பிர வாகித்தது.
கவிஞர், சமூக சீர்திருத்தவாதி, மறுமுறை கண்ட வாசகம், ஜுவகாரு ண்ய ஒழுக்கம் என்ற நூல்களை இயற்றிய நூலாசிரியர், உரையாசிரியர், பதிப் பாசிரியர், போதாகாசிரியர், சித்த மருத்துவர், அருள் ஞானி, கல்வெட்டு ஆராய்ச்சியாளர், தமிழகத்தில் முதல் திருக்குறள் வகுப்பு நடத்தியவர், மும்மொழி கல்வியை கொண்டுவந்தவர், முதல் முதியோர் கல்விக்கு வித்திட்டவர் என்று பல சிறப்பு பெயர்களை பெற்றார்.
ஆழ்மன வழிபாடு, தியா னம் பற்றிய வழி காட்டுதல் கள் போன்றவை ‘வள்ள லார் பாதை’ என்று பிரசித்தி பெற ஆரம்பித்தது. அவரது பன்முக ஞானமும், முதன் மையும் நம்மை வியக்க வைக்கின்றன. 1867 ல் இராமலிங்க அடிகளாரின் பாடல்களை ‘திருஅருட்பா’ என்ற பெயரில் வெளியிட்டார் அவரது முதல் சீடரான வேலாயுத முதலியார்.
வள்ளலாரின் கொள்கைகள்: மதங்களின் மூன்று முக்கிய அம்சங் கள் தத்துவம், ஒழுக்கம், சடங்குகள். இவற்றில் மக்களிடம் மதவெறி யைத் தூண்டுவது சடங்குகளே எனக் கண்டு அவற்றை ஒதுக்கி, மனித இனங்களை இணைப்பது ஒழுக்க நெறியே என்பதை உணர் ந்து 1865 ஆம் ஆண்டு சமரச சன்மார்க்க சங்கத்தை வள்ளலார் நிறு வி னார். அதன்படி எல்லோரும் பின்பற்றக்கூடிய கொள்கைகளை யும், வாழ்க்கையின் ரகசியங்க ளையும் கூறினார்.
“நாம் எல்லா உயிர்களிடமும் அன்பாக இருக்க வேண்டும். உயிர்க் கொலை செய்தலும், புலால் உண்ணுதலும் கூடாது. சாதி, மதம், குலம் என்ற வேற்று மைகளை பார்க்கக் கூடாது. மக்கள் அனைவ ரும் ஒற்றுமை யுடன் வாழ வேண்டும். கொலை , கோபம், சோம்பல், பொய், பொறாமை, கடுஞ்சொல் கூடாது, பதட்ட ப் படக்கூடாது” என்பவை, இராமலிங்கரின் முக்கிய கொள்கைகள்.
அருட்பெருஞ்சோதி: இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தரும சா லை ஒன்றை அமைத்தார். அங்கே தினமும் அன்னதானம் செய்யும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார். அது இன்றும் தொடர்கிறது.
1870ல் வடலூரில் மேட்டுக்குப்பம் கிராமத்தி ல், “சத்திய ஞானசபை” என்னும் கோவிலைப் புது முறையில் கட்டினார்.
அதனுள், விளக்கு ஒன்றும், விளக்கின் முன் கண்ணாடி ஒன்றை யும் கட்டினார். விளக்கின் முன் ஏழு திரைகள் வைத்து மறைக்கப் பட்டிருக்கும். இதனை ஒவ்வொன்றாக நீக்கிய பிறகு தோன்றும் விளக்கொளியை “அருட் பெருஞ்சோதி” ஆண்டவராகக் கருதி வழி படுமாறு மக்களை இராம லிங்க அடிகள் கேட்டுக் கொண்டார்.1872 ஜனவரி 25 ல் ‘ஞானசபை’ துவக்கப்பட்டது. அதனுள்தான் இந்த அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை
“அருட்பெருஞ்சோதி” உள்ளது. ஏழு மாயைகளை அகற்றினால் தெய் வீகப் பேரொளியைக் காணலாம் என்பதே தத்துவ விளக்கம்.
சத்மார்க்கம் என்ற வடமொழிச் சொல் லே தமிழில் சன்மார்க்கம் என உருமா றிற்று. சத் என்றால் நிலைத்திருப்பது, உண்மை என்று பொரு ள்படும். சன் மார்க்கம் என்பது எல்லா மதங்களும் கூறும் நிலையான, உண்மையான ஒழுக்கம். இச்சன் மார்க்க சமயம் கலப் பதற்கு, சுத்த மானது. எனவேதான் வள் ளலாரின் இயக்கம் சமரச, சுத்த சன் மார்க்க, சத்திய சங்கமாக மலர்ந்தது.
அதனால்தான் திருமணம் நடந்தும் முத லிரவு அன்றே மனைவியிடம் “உடல் மீதான ஆசையை ஒழித்து விடு. நான் சன்மார்க்கத்தை நாடு பவன். சிற்றின்பத்துக்கு அடிமையாக மாட்டேன்” என்றார். சன்மார்க்க த்தின் இரு கண்கள் அன்பும், அறிவும்தான். அன்பு முற்றிய நிலையில் அருளாகவும், அறிவு முற்றிய நிலையில் அறியாமை இரு ளை அகற்றும் சோதியாகவும் மலர் கிறது. இதுவே அருட்பெருஞ் சோதியாகும்.
இந்த அருட் பெரு ட்சோதியை வழிபடத் தேவை யானது தனிப்பெருங்கரு ணை, தயவு, தொண்டு, உயிர் இரக்கம் மட்டுமே.
மண்ணில் பிறந்த விருட்சம்: விக்கிரகங்களுக்கு முன்நின்று பரவ சமாகப் பாடி, அதற்காகப் படையல் செய்து, தான் செய்யும் பாவங் களுக்குப் பரிகாரமாக காசுகளை கொட்டிக் குவிப்பதுதான் பக்தி என்று இருக்கும் இக்காலத்தில் எல்லா உயிர்களிடத்திலும் கடவுள் இருப்பதை அறி வதே ஈசுவர பக்தியாகும் என்று பக்திக்கு புதிய பரிணாமத்தை கொடுத்தவர் வள்ளலார்.
வள்ளல் பெருமான் வறட்டு ஆத்திகரும் அல்ல. முரட்டு நாத்திகரும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்டவர். மனிதனை தினம் தினம் வதைக்கும், பயமுறுத்தும் பிணிகளில் ஒன்று பசிப்பினி, மற்றொ ன்று மரணப்பினி. இந்த இரண்டையும் எதிர்த்து குரல் கொடுத்தவர் வள்ளலார்.
ஜோதியில் கலந்தார்: தாம் 51 ஆவது வயதில் உலக வாழ்வை விட்டுச் செல்லப் போவதாக சீட ர்களிடம் கூறி, அவர்களைப் பக் குவப்படுத்தினார். மறைவதற்கு 3 மாதங்களுக்கு முன்பிருந்தே சாப்பிடும் உணவின் அளவைப் படிப்படியாக குறைக்கலானார். முடிவில் தேன் மட்டும் அருந்தினார்.
1874 ஜனவரி 30… அது, நள்ளிரவில் புனிதமான பூச நட்சத்திரம் உதி க்கும் புனிதநாள். இராமலிங்கர் அன்று நிகழ்த்திய சொற்பொழிவில், “அன்பர்களே! அருட்பெருஞ்சோதி எப்போதும் எரியும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இறைஜோதியுடன் ஐக்கியமா கப் போகிறேன். அறையை வெளியில் தாழ்ப்பா ள் போட்டு விடுங்கள். மீண்டும் கதவைத் திற க்கும்போது அறை காலியாக(இருந்தது) இருக் கும்” என அறிவித்தார். அறைக்குள் புகுந்து கத வை உட்புறமாகப் பூட்டிக் கொ ண்டார். அதிர்ந்த பக்தர்கள், சிறிது நேரம் கழித்து அறையைத் திற ந்தனர். உள்ளே அவர் இல்லை. மாயமாக மறை ந்திருந்தார்.
அடிகளாரின் மறைவு பற்றி அரசாங்கத்துக்குச் சந்தேகம் ஏற்பட்டது. அப்போது தென் ஆற்காடு மாவட்டக் கலெக்டராக இருந்த ஜே. எச். கார்டி ன்ஸ் மற்றும் சில அதிகாரிகள், டாக்டர் ஆகியோ ருடன் சென் று விசாரணை நடத்தினார். பின்னர் அவர் அரசாங்கத்துக்கு அவர் அனுப்பிய அறிக் கையில், “இராமலிங்கர், இறைவனோடு ஐக்கி யமாகி விட்டதாக அவர் மீது பக்தி கொண்டவர்கள் நம்புகிறார்கள். ஒரு மதத் தலைவர் பற்றி கருத்து வேற்றுமை எழுதுவது இயற்கை என்றாலும், அவருடைய பாடல்களைப் பொறுத்தவரை, அவை மிக உயர்தரமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
வள்ளலார் ஏற்றிவைத்த அருட்பெருஞ்சோதியு ம் அவர் தொடங்கிய ஆன்மிக மறுமலர்ச்சி சேவைகளும் இன்றும் ஒளி வீசிக் கொண்டிரு க்கின்றன. இவரது சேவையை கருத்தில் கொ ண்டு 2007 ஆகஸ்ட் 17 ல் அரசு வள்ளலார் தபால் தலையை வெளியிட்டு சிறப்பித்தது.
முடிவுரை: இறைவனுக்கு எப்படி முடிவுரை எழுத முடியும். இந்த சிறிய கட்டுரைக்கு மட்டு மே இது முடிவுரை. வள்ளலார் ஒவ்வோர் இதய த்திலும் நீக்கமற வாழ்ந்து வருகிறார்.
வீதி தோறும் தர்ம சாலைகள் தோற்றுவிதார். மரணத்தை ஒழுக்கத்தால், நித்திய கரும விதிகளா ல், சாகாக் கல்வியால், தத்துவ நிக்கிரகத்தால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உதயமாகி இருக்கிறது வள்ளலார் என்ற சகாப்தத் தால்.! மாணி க்க வாசகரிடம் உருகி ஞானப் பாதையில் நடந்து, சைவ சித்தாந்த எல்லைகளைக் கடந்து, சன் மார்க்கம் என் னும் சிகரத்தை தொட்டவர் வள்ளலார்.சிந்தைக்கு அருட்பெருஞ்சோதி என்றார். செயலுக்கு தனிப் பெருங் கருணை என்றார்.

No comments:

Post a Comment